திருக்கோவில் பெயர்
அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில்
அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில்
தெத்திகிரிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன்
தெத்திகிரிபட்டி ஊராட்சி (Thethigiripatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.
சேலம் (Salem) மாவட்டம், மேட்டூர் (Mettur) வட்டம், மேச்சேரி (Mecheri) ஒன்றியம், தெத்திகிரிப்பட்டி (Thethigiripatti) அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் மற்றும் பரிவார தெய்வங்கள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் நாள்: சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் நாள் (19-11-2023) ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் (தனுசு லக்கினம்).
இக்கிராமத்தில் காணப்படும் தெத்திகிரிப்பட்டி அக்னி மாரியம்மன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. பங்குனி முதல்செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டாம்வியாழன் வரை திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். தெத்திகிரிப்பட்டி ஊர் பொதுமக்கள் இவ்விழாவினை நடத்துவர். சுற்று வட்டார கிராம மக்களின் இஷ்ட தெய்வமாக இம்மாரியம்மன் விளங்குகிறது..! மேலும் பழமையான முருகன்கோவில் இவ்வூரின் மலையில் அமைந்துள்ளது. இவ்வூர்மக்களின் பூர்வீகம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உஞ்சனை என்ற பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தெத்திகிரிப்பட்டி, கரும்பு சாலையூர், கச்சராயனூர், ஆட்டுகாரனூர் பகுதிகளில் நடுநிலைப் பள்ளிகளும், ஆரம்பப்பள்ளிகளும் காணப்படுகிறது.